Friday 16 August 2013

வெளிநாடு வாழ் இந்தியரின் வங்கி கணக்கில் 70 லட்சம் மோசடி

கோவை: கோவை பீளமேடு பி.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் மோகன் (57). தற்போது இவர் வெளிநாடு வாழ் இந்தியராக உள்ளார். இவர் ஜப்பான் யோகோகாம பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு துவங்கியுள்ளார்.
தனது வங்கி கணக்கில்  10 தவணைகளில் 3 கோடியே 93லட்சம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் சுப்ரமணியம் மோகன் கோவை வந்துள்ளார். இவரும், இவரது மனைவியும் வங்கிக்கு சென்று பார்த்தபோது, வங்கிகணக்கில் ரூ. 70லட்சம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

 கணக்கை பரிசோதித்த போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பண பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சீனாவில் உள்ள வங்கியில் 60 லட்சம், டெல்லியில் உள்ள வங்கியில் 5 லட்சம், பரிதாபாத்தில் உள்ள வங்கியில் ரூ.5 லட்சம் பண பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இதுகுறித்து வங்கியின் முதன்மை அதிகாரியிடம் சுப்ரமணியம் மோகன் விசாரித்தபோது அதிகாரிகள் தெரியவில்லை என பதில் கூறியுள்ளனர். இதையடுத்து சுப்ரமணியம் மோகன் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே விஸ்வநாதனியிடம் புகார் அளித்தார்.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீசார் சரவணா தேவேந்திரன் தலைமையில் வழக்கை விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்து. சைபர் கிரைம் போலீசார் சுப்ரமணியம் மோகனுக்கு தெரிந்தவர் யாரோ வங்கி கணக்கில் உள்ள மின்னஞ்சலின் கடவுச்சொல்லை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்திருக்கலாம் அல்லது வங்கியில் ஏதாவது மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் ஆள்மாறாட்டம், ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்ப மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment