Showing posts with label chennai cyber cell. Show all posts
Showing posts with label chennai cyber cell. Show all posts

Friday, 16 August 2013

எல்.கே.ஜி. மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடுதல் வேட்டை...

சென்னை: எல்.கே.ஜி. மாணவன் கடத்தப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவன் மீட்பு தொடர்பான சில விவரங்கள் தொடர்ந்து மர்மமாக உள்ளது. சென்னை ஜார்ஜ் டவுன் துறைமுக அதிகாரிகள் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிஹரன். எண்ணூர் துறைமுகத்தில் உதவிமேலாளராக பணியாற்றுகிறார்.மனைவி பத்மாவதி. இவர்களது ஒரே மகன் சூர்யா (4), ஆர்.ஏ.புரம் செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் எல்கேஜி படிக்கிறான். தினமும் காலையில் சிறுவனை வேன் டிரைவர் ராஜுபள்ளியில் கொண்டு விடுவார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் சூர்யாவை விட்டு சென்ற ராஜு, காலை 11.40க்கு பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தார். பள்ளியில் வழக்கமாக இருக்கும் இடத்தில் சூர்யா இல்லை.ஆசிரியர்களிடம் சூர்யா குறித்து விசாரித்தார் ராஜு. யாரோ ஒருவர் வந்து சூர்யாவை அழைத்து சென்றதாக அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஹரிஹரனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் பதற்றத்துடன் வந்து பள்ளி நிர்வாகிகளிடம் விசாரித்தார். இதற்கிடையில் பள்ளியில் இருந்து போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள 16 கேமராவிலும் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. ஒரு கேமராவில் மர்ம நபர் ஒருவர், சூர்யாவை அழைத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.மதியம் ஒரு மணிக்கு ஹரிஹரனின் தொலைபேசிக்கு பேசிய மர்ம நபர், சூர்யாவை உயிரோடு பார்க்க வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும்.

 போலீசுக்கு சென்றால் உன் மகனை கொலை செய்வோம் என்று மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்தார்.இதுகுறித்து கமிஷனர் ஜார்ஜிடம் ஹரிஹரன் புகார் தெரிவித்தார். உடனடியாக கடத்தல்காரர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஹரிஹரனுக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் தேடுதல் வேட்டையை தொடங்கினர். செல்போனில் மிரட்டிய குற்றவாளிகள் கொருக்குப்பேட்டை பகுதியில் சுற்றுவது டவர் மூலம் தெரிந்தது. உஷாரடைந்த போலீசார் அங்கு வாகன சோதனை நடத்தினர். அப்போது கொருக்குப்பேட்டை பாலத்தில் மாலை 4.30 மணிக்கு ஒரு பைக் வந்தது. அதில் சிறுவன் சூர்யா இருந்தான். போலீசாரை பார்த்ததும், பைக்கின் பின்னால் இருந்த மர்ம நபர் தப்பினான். பைக் ஓட்டி வந்த ஆசாமியை பிடித்து சூர்யாவை மீட்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் பெயர் பிரபு (30). வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கார் டிரைவர் என்பது தெரிந்தது. அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம்:சேலத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்ப்ராய்டரிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். நிறுவன உரிமையாளர் விஷாலுடன் நண்பரானார்.

வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டையை சேர்ந்த 3 பேர் என்று 6 பேர் நண்பர்களாக இருந்தோம். பணக்காரனாக வாழ வேண்டும் என்று நாங்கள் அடிக்கடி பேசுவோம். அதற்கு மாணவனை கடத்தி பணம் பறிக்கலாம் என்று நண்பர்கள் கூறி வந்தனர். என் நண்பர்தான் சிறுவனின் வீட்டில் ஏற்கனவே டிரைவராக வேலை பார்த்தார். அவர் சூர்யாவை பள்ளிக்கு அழைத்து சென்று வருவார். அதனால் சூர்யாவை எனக்கு தெரியும்.அவனை கடத்த திட்டம் போட்டோம். நானும் கதிரவனும் பைக்கில் பள்ளிக்கு சென்றோம். அங்கு சூர்யாவை பெயர் சொல்லி அழைத்தேன். அவனும் வந்து விட்டான். கதிரவன் பைக்கில் ஏறி வண்ணாரப்பேட்டை வந்தோம். அங்கு பைக்கிலேயே மாணவனுடன் சுற்றினோம். மற்ற நண்பர்கள் 4 பேர், வேறு 2 பைக்குகளில் தனித்தனியாக பிரிந்து சூர்யாவின் அப்பாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் தருவதாக சொன்னதால் பைக்கிலேயே சுற்றிக் கொண்டிருந்தோம்.

 பணம் கிடைத்தவுடன் சூர்யாவை வீட்டுக்கு அருகில் விட்டு விட முடிவு செய்தோம். அதற்குள் போலீசில் சிக்கி கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் பிரபு கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து கதிரவன் மற்றும் எம்ப்ராய்டரிங் நிறுவன உரிமையாளர் விஷால் உள்பட மற்றவர்க¬ போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவே கதிரவன் சேலம் தப்பி சென்றுள்ளார். தனிப்படை போலீசார் சேலம் விரைந்து சென்று அவரை நேற்று காலை கைது செய்தனர். மேலும் வண்ணாரப்பேட்டையில் விஷாலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.